2010-03-13 14:41:29

எல்லா வழிகளிலும் இலங்கைக்கு உதவுவதற்கு முயற்சி செய்யும் நாடுகளின் நோக்கங்கள் நேர்மையானவை அல்ல- அருட்பணி நித்தியா


மார்ச்13,2010 எல்லா வழிகளிலும் இலங்கைக்கு உதவுவதற்கு முயற்சி செய்யும் சீனா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் நோக்கங்கள் நேர்மையானவை அல்ல என்று, இந்திய ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணையச் செயலர் அருட்பணி நித்தியா கூறினார்.

இலங்கையில் புதிய விமான நிலையம் கட்டுவதற்கு சீனா உதவி செய்யத் திட்டமிட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்த அருட்பணி நித்தியா, இதன் மூலம் சீனா இலங்கையில் தனது இராணுவத்தளத்திற்கான பிடிப்பையும் அதன் தலைமைத்துவ செல்வாக்கையும் கொண்டிருக்கும், இதனை நாம் கவனத்தில் கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார்.

இலங்கை அதிகாரிகள் இந்த ஆபத்தை அறிந்திருந்தாலும் நாட்டு மக்களுக்காக அல்லாமல் தங்களுக்காகச் செயல்படுகிறார்கள் என்றும் அக்குரு குறை கூறினார்.

இலங்கையின் தென் பகுதியில் இரண்டாவது விமான நிலையம் கட்டுவதற்கு 20 கோடி அமெரிக்க டாலரையும், தொடர்வண்டிப் பாதை அமைப்பை மேம்படுத்துவதற்கென மேலும் 10 கோடி அமெரிக்க டாலரையும் வழங்குவதற்குச் சீனா திட்டமிட்டுள்ளதாகச் சொல்லப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.