2010-03-12 16:06:19

மறையுரைகள் எட்டு நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் - பேராயர் எத்ரோவிச்


மார்ச்12,2010 மறையுரைகள் எட்டு நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று உலக ஆயர்கள் மாமன்றச் செயலர் பேராயர் Nikola Eterovic, இறைவார்த்தை குறித்த தனது புதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

2008ம் ஆண்டின் உலக ஆயர்கள் மாமன்றத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதியுள்ள இந்த நூலில், குருக்கள், ஞாயிறு மறையுரைகளைத் தயார் செய்வதற்கு உதவும் வழிமுறைகளை விளக்கியுள்ளார்.

குருக்கள், தங்கள் ஞாயிறு மறையுரைகளை ஏறத்தாழ ஒரு வாரத்திற்கு முன்னரே தயார் செய்ய வேண்டுமென்ற திருத்தந்தையின் ஆலோசனையையும் இதில் குறிப்பிட்டுள்ளார் பேராயர் எத்ரோவிச்.

மறையுரைகள் விசுவாசிகளின் அன்றாட வாழ்வின் உண்மை நிலையை வெளிக்கொணர்வதால், அவை தயாரிப்பு இல்லாமல் வழங்கப்படுவதாய் இருக்கக் கூடாது என்றும் பேராயரின் புத்தகம் பரிந்துரைக்கிறது.

குருக்கள், விவிலியத்தையும் தினத்தாள்களையும் பயன்படுத்துவதன் மூலம் அவரது செய்தி காலத்திற்கேற்றதாக இருக்கும் என்றும் பேராயர் Nikola Eterovic கூறியுள்ளார்







All the contents on this site are copyrighted ©.