குருக்கள் ஆண்டில் அனைத்து அருட்பணியாளரும் ஒப்புரவு அருட்சாதனத்திற்கு தங்களதுமெய்ப்புப் பணியில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் - திருத்தந்தை16ம்
பெனெடிக்ட்
மார்ச்11,2010 இந்தக் குருக்கள் ஆண்டில் அனைத்து அருட்பணியாளரும், புனித ஜான் மரிய வியான்னியின்
எடுத்துக் காட்டைப் பின்பற்றி, ஒப்புரவு அருட்சாதனத்திற்கு தங்களது மெய்ப்புப் பணியில்
முக்கியத்துவம் கொடுக்குமாறு திருத்தந்தை 16ம் பெனெடிக்ட் வலியுறுத்தினார். அப்போஸ்தலிக்க
பாவமன்னிப்பு நிறுவனம் நடத்திய வகுப்புகளில் கலந்து கொண்ட குருத்துவ பிரதிநிதிகளை வத்திக்கானில் சந்தித்து,
இவ்வியாழனன்று உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கேட்டுக் கொண்டார். குருக்கள், தங்களின் அழைப்பை
மிக உன்னத விதத்தில் வாழவேண்டும், ஏனெனில் இவ்வாறு வாழ்வதன் வழியாக, நம் ஆண்டவரின் பிரசன்னத்திற்குத்
தெளிவான சான்று பகர முடியும் என்றும் திருத்தந்தை கூறினார்.தான் என்ற கோட்பாடு, மற்றும்
தான் சொல்வதே சரி என்ற மனநிலையைக் கொண்ட ஒரு கலாச்சாரச் சூழலில் வாழ்ந்து வரும் குருக்கள்,
ஒவ்வொரு நாளும் தங்களின் வாழ்வில் கிறிஸ்துவின் பிரசன்னத்தைப் பிரதிபலிப்பது இன்றியமையாதது
என்றும் திருத்தந்தை கோடிட்டுக் காட்டினார்.