சிறைக்கைதிகளின் வாழ்க்கை தர மேம்பாட்டிற்கு அழைப்பு விடுக்கிறார் ஜிம்பாவே பேராயர்.
மார்ச் 09,2010. ஜிம்பாவே நாட்டில் சிறை வைக்கப்பட்டிருக்கும் கைதிகளின் வாழ்க்கை
தரம் குறித்து தன் தவக்கால மேய்ப்புப் பணிச் சுற்றறிக்கையில் கவலையை வெளியிட்டுள்ளார்
அந்நாட்டுப் பேராயர் Robert C Ndlovu.
சிறைக்கைதிகள் அடைத்துவைக்கப்பட்டிருக்கும்
நிலைகள் மிகவும் கீழ்த்தரமானவைகளாக இருப்பதாக உரைத்த ஹராரே பேராயர், கடந்த ஆண்டில் புனித
வின்சென்ட் தெ பால் சபையின் உதவியுடன் சிறைக்கைதிகளுக்கு போர்வைகள், சமையல் எண்ணெய்,
சவக்காரம், மருந்துகள், உணவுப்பொருட்கள் போன்றவைகளை வழங்கியதையும் தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹராரேயின்
5 சிறைகளில் உள்ள காய்கறித் தோட்டங்களுக்குத் தேவையான அனைத்தையும் வழங்கி, சிறைக் கைதிகளுக்கான
காய்கறி உற்பத்திக்கு தலத் திருச்சபை உதவியுள்ளதையும் எடுத்துரைத்துள்ள பேராயர் C Ndlovu,
அதற்கு முந்தைய காலங்களில் பல சிறைக்கைதிகள் எவ்வித பராமரிப்பும் இன்றி நோயாலும் பசியாலும்
உயிரிழந்து வந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளார்.