2010-03-08 16:20:33

மலேசியாவில் முஸ்லிம் பத்திரிக்கையாளர்கள் போது மன்னிப்பு கோரியுள்ளதை அங்குள்ள கிறிஸ்தவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்


மார்ச்08,2010 மலேசியாவில் திவ்ய நற்கருணையை அவமதிக்கும் வண்ணம் நடந்து கொண்ட இரு முஸ்லிம் பத்திரிக்கையாளர்கள் போது மன்னிப்பு கோரியுள்ளதை அங்குள்ள கிறிஸ்தவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

Al Islam பத்திரிக்கையாளர்கள் தங்களது நடவடிக்கை கிறிஸ்தவர்களைப் புண்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்படவில்லை என்றும், இனி இது போல் நடை பெறாது என்றும் அந்தப் பத்திரிக்கையின் இணைய தளத்தில் தங்கள் மன்னிப்பைக் கோரி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த மன்னிப்பு கோரும் பகுதி Al Islam பத்திரிக்கையின் ஏப்ரல் மாதம் அச்சடித்து வெளியிடப்படும் என்றும் பத்திரிக்கையின் சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

முஸ்லீம்களைக் கிறிஸ்தவர்களாக மனம் மாற்றும் முயற்சிகள் மலேசியாவில் மேற்கொள்ளப்படவில்லை என்றும், கோவில்களுக்கச் செல்பவர்களைக் கிறிஸ்தவர்கள் அன்போடு வரவேற்கின்றனர் என்றும் இந்த அறிக்கை மேலும் கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.