2010-03-06 15:26:05

பெண்களை நன்முறையில் பாதுகாப்பது குறித்த ஆலோசனைகளை வழங்குவதற்குத் தனிப்பட்ட வல்லுநர்கள் குழு நியமனம்-ஐ.நா.


மார்ச்06,2010 உலகில் போர் இடம் பெறும் இடங்களில் பெண்களை நன்முறையில் பாதுகாப்பது குறித்த ஆலோசனைகளை வழங்குவதற்குத் தனிப்பட்ட வல்லுநர்கள் குழுவை நியமித்துள்ளது ஐக்கிய நாடுகள் நிறுவனம்.

மோதல்கள் முடிந்து நாட்டைக் கட்டியெழுப்பும் பணிகள், அமைதிக்கான நடவடிக்கைகள், நிர்வாக அமைப்புகள் போன்றவற்றில் பெண்களின் குரல்கள் கேட்கப்படுவதற்கு இந்தக் குழு பரிந்துரைகளை முன்வைக்கும் என்றும் ஐ.நா. கூறியது.

அமைதி மற்றும் பாதுகாப்புப் பணிகளில் பெண்களின் பங்கு குறித்த தீர்மானம் ஐ.நா.பாதுகாப்பு அவையில் நிறைவேற்றப்பட்ட பத்தாம் ஆண்டு

நிறைவுறுவதை முன்னிட்டு இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 8ம் தேதி, வருகிற திங்களன்று உலக பெண்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது








All the contents on this site are copyrighted ©.