2010-03-06 15:22:57

ஈராக் பொதுத் தேர்தலில் அனைவரும் ஓட்டளிக்குமாறு பாக்தாத் கல்தேயரீதி பிதாப்பிதா அழைப்பு


மார்ச்06,2010 ஈராக்கில் முஸ்லீம் தீவிரவாதிகள் பல வாரங்களாக ஈடுபட்டுள்ள கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறைகளில் எண்ணற்ற கிறிஸ்தவர்கள் இறந்திருந்தாலும், நாட்டின் பொதுநலனை முன்னிட்டு அனைவரும் பொதுத் தேர்தலில் ஓட்டளிக்குமாறு அழைப்பு விடுத்தார் பாக்தாத் கல்தேயரீதி பிதாப்பிதா கர்தினால் இம்மானுவேல் டெலி (Emmanuel III Delly).

இஞ்ஞாயிறன்று ஈராக்கில் இடம் பெறும் பொதுத் தேர்தல்களை முன்னிட்டு SIR என்ற இத்தாலிய செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த கர்தினால் டெலி, இந்தத் தேர்தல்கள் வன்முறையின்றி இடம்பெற வேண்டுமென்று தாங்கள் செபிப்பதாகக் கூறினார்.

கிறிஸ்தவர்கள் அமைதியையும் ஒப்புரவையும் விரும்புவதாகவும் கூறிய அவர், அனைத்துக் கிறிஸ்தவர்களும் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று ஓட்டளிக்குமாறு அவர்களைத் தூண்டி வருவதாகவும் கூறினார்.

அண்மையில் மொசூலில் முஸ்லீம் தீவிரவாதிகளால் எட்டு கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டது குறித்த கண்டனத்தையும் கர்தினால் தெரிவித்தார்







All the contents on this site are copyrighted ©.