திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வருகிற நவம்பர் 6,7 தேதிகளில் சந்தியாகோ தி கொம்பஸ்தெல்லாவுக்குத்
திருப்பயணம் மேற்கொள்வார்
மார்ச்03,2010 திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வருகிற நவம்பர் 6,7 தேதிகளில் ஸ்பெயினுக்குத்
திருப்பயணம் மேற்கொள்வார் என்று திருப்பீட பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெடரிக்கோ
லொம்பார்தி கூறினார். சந்தியாகோ தி கொம்பஸ்தெல்லாவில் (Santiago di Compostela) இவ்வாண்டு
ஜூபிலி ஆண்டாகச் சிறப்பிக்கப்பட்டு வருவதை முன்னிட்டு, வருகிற நவம்பரில் முதலில் அந்நகருக்கும்,
பின்னர் Barcelona வில் ஓர் ஆலய மந்திரிப்புக்காக அந்நகருக்கும் திருத்தந்தை செல்வார்
என்று அருள்தந்தை லொம்பார்தி மேலும் கூறினார். இத்திருப்பயணம் குறித்து சந்தியாகோ
பேராயர் ஹூலியன் பாரியோ மற்றும் பார்செலோனா கர்தினால் லூயிஸ் மார்ட்டிநெஸ் சிஸ்டாக்,
இப்புதனன்று நிருபர் கூட்டத்தில் அறிவித்ததைத் தொடர்ந்து திருப்பீட பேச்சாளரும் இதனை
உறுதி செய்தார்.2005ம் ஆண்டில் பாப்பிறையாகப் பணியேற்ற திருத்தந்தையி்ன் இந்த நவம்பர்
இத்திருப்பயணம், ஸ்பெயினுக்கான அவரின் இரண்டாவது பயணமாக அமைகின்றது.