வடகிழக்கு இந்தியாவில் கிறிஸ்தவ மறைபோதகர்கள் ஆற்றி வரும் நற்பணிகளுக்குத் நன்றி தெரிவித்தார்
அசாம் முதலமைச்சர்
மார்ச்02,2010 கிறிஸ்தவ மறைபோதகர்களும் நிறுவனங்களும் வடகிழக்கு இந்தியாவுக்கு, குறிப்பாக,
கல்வி, நலவாழ்வு, சமூக வளர்ச்சி குறிப்பாக ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்டோரின் வளர்ச்சிக்கு
ஆற்றி வரும் நற்பணிகளுக்குத் தனது பாராட்டைத் தெரிவித்தார் அசாம் மாநில முதலமைச்சர் Tarun
Gogoi.
குவஹாட்டியில் கூட்டம் நடத்தும் இந்தியாவின் 163 ஆயர்களுக்கு ஞாயிறன்று
விருந்து கொடுத்த அசாம் மாநில முதலமைச்சர், திருச்சபை இளையோருக்கு வேலைவாய்ப்பை வழங்குவது
மற்றும் அவர்களை முன்னேற்றுவதற்கு ஆற்றி வரும் சேவைகளையும் பாராட்டினார்.
இப்பகுதியின்
இளையோர் மிகவும் திறமைசாலிகள் மற்றும் வளமானவர்கள், இவர்களை நினைத்து பெருமைப்படுகிறோம்
என்றும் Gogoi கூறினார்.
வடகிழக்கு இந்தியாவில் அமைதி நிலவ ஆயர்கள் செபிக்குமாறும்
தங்களின் ஆசீர்களை வழங்குமாறும் அசாம் மாநில முதலமைச்சர் விண்ணப்பித்தார்.