இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் மனிதாபிமானத்தை உள்ளடக்கியவைகளாக இருக்க
வேண்டும்- இயேசு சபை பொருளாதார வல்லுனர்கள்
மார்ச்02,2010 வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் இந்திய ஏழைகளுள் பெரும்பான்மையினோரை சென்றடைய
வேண்டுமெனில் அத்திட்டங்கள் மனிதாபிமானத்தை உள்ளடக்கியவைகளாக இருக்க வேண்டும் என அழைப்பு
விடுத்துள்ளனர் இயேசு சபை பொருளாதார வல்லுனர்கள்.
அரசின் உதவித் திட்டங்கள் பல
நாட்டின் ஏழைகளைச் சென்று அடைவதில்லை என்ற இயேசு சபை குரு Dominic Savio அரசின் திட்டங்களுக்கு
செயல் வடிவம் கொடுக்க வேண்டியது பொருளாதார மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் அரசு சாரா
அமைப்புகளின் முக்கிய பணிகளுள் ஒன்றாக இருக்க வேண்டும் என்றார்.
ஏற்கனவே கல்வியில்
குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ள இயேசு சபையினர், பொருளாதார வல்லுநர் குழு ஒன்றை உருவாக்கி,
அரசின் திட்ட வல்லுனர்களுக்குச் சரியான வழியில் உதவத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்
கொல்கத்தா St Xavier’s கல்லூரியின் முதல்வர் இயேசு சபை குரு John Felix Raj