2010-03-02 15:18:18

இந்திய ஆயர் பேரவையின் புதிய தலைவர் கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ்


மார்ச்02,2010 இந்திய ஆயர் பேரவையின் புதிய தலைவராக, மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

உலகின் நான்காவது பெரிய ஆயர் பேரவையாகிய இந்திய ஆயர் பேரவையின் முதல் உதவித் தலைவராக சீரோ மலன்கரா ரீதி திருச்சபையின் தலைவர் பேராயர் மோரன் மார் பசிலியோஸ் கிளீமிஸ் தொட்டுங்கல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இரண்டாவது உதவித் தலைவராக கோத்தமங்கலம் ஆயர் ஜார்ஜ் புன்னக்கோட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அசாம் மாநிலத்தின் குவஹாட்டி தொன்போஸ்கோ நிறுவனத்தில் நடைபெற்று வரும் 29வது இந்திய ஆயர் பேரவை கூட்டத்தில் புதிய தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆயர்கள் கூட்டம் ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறுகின்றது. இதில் புதிய தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பிப்ரவரி 24ம் தேதி முதல் இடம் பெற்று வரும் இக்கூட்டம், இப்புதனன்று நிறைவடையும்.








All the contents on this site are copyrighted ©.