2010-02-27 16:50:10

இராக்கில் கிறிஸ்தவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து இடம் பெற்று வரும் வன்முறையைக் கண்டித்து ஆயர்கள் அறிக்கை


பிப்.27,2010 இராக்கில் கிறிஸ்தவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து இடம் பெற்று வரும் வன்முறையைக் கண்டித்து அந்நாட்டின் ஆயர்கள் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
கிறிஸ்தவர்களுக்கு எதிரான இஸ்லாமியரின் வன்முறையில் கடந்த வாரத்தில் மட்டும் ஐந்து பேர் இறந்துள்ளதைக் குறிப்பிட்டு, அரசு திட்டவட்டமான நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஆயர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.Fides செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த சிரிய கத்தோலிக்க பேராயர் Georges Cosmouusa மொசுலில் கிறிஸ்தவர்களின் இருப்புக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கு அதிகாரிகள் முழு பொறுப்பையும் ஏற்குமாறு கூறினார். இவ்வன்முறைகளை நிறுத்துவதில், தல அரசுகள் அதிக ஈடுபாடு காட்டுமாறும் ஆயர்கள் கேட்டுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.