பாகிஸ்தானில் தங்கள் மத நம்பிக்கைக்காகக் கொல்லப்பட்ட இரண்டு சீக்கியர்களுக்காக டெல்லி
கத்தோலிக்கர் பல்சமயப் பிரார்த்தனை
பிப்.26,2010 பாகிஸ்தானில் தங்கள் மத நம்பிக்கைக்காகக் கடத்தப்பட்டு தலை வெட்டப்பட்ட
இரண்டு சீக்கிய ஆண்களுக்காக டெல்லி கத்தோலிக்க உயர் மறைமாவட்டம் பல்சமய பிரார்த்தனை ஒன்றை
நடத்தியுள்ளது. பாகிஸ்தானிலுள்ள தலிபான்கள் கைபர் மாவட்டத்தில் இரண்டு வாரங்களுக்கு
முன்னர் இரண்டு சீக்கியர்களைக் கடத்தி இஞ்ஞாயிறன்று கொலை செய்துள்ளனர்.பணத்திற்காக
இவர்கள் கடத்தப்பட்டார்கள் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் சொல்லியுள்ள போதிலும், இவர்கள்
இசுலாமுக்கு மதம் மாற மறுத்தார்கள் என்ற காரணத்திற்காகவே தலைவெட்டப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்கள்
என்று உயர் மறைமாவட்ட அறிக்கை கூறுகிறது.