2010-02-25 16:23:41

சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்த சர்வதேச அளவிலான நிர்வாகம் மேம்பட வேண்டும் - ஐ.நா. பொதுச் செயலர்


பிப்.25,2010 உலகில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்த இலக்குகளை அடைவதற்கு, சுற்றுச் சூழல் குறித்த சர்வதேச அளவிலான நிர்வாகம் மேம்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்று வரும் உலக சுற்றுச் சூழல் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் உரையாற்றிய திரு மூன் இவ்வாறு கூறினார்.
இந்த மாநாட்டில் 100 சுற்றுச் சூழல் விவகார அமைச்சர்கள் உட்பட 130 நாடுகளின் சுமார் 1000 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளில் புதிய யுக்திகள் முன் வைக்கப்ப்படுமாறும் திரு மூன் கேட்டுக் கொண்டார்.







All the contents on this site are copyrighted ©.