பிப்.25,2010 கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் திருச்சபைகளுக்கு இடையேயான பலன் தரும்
ஒத்துழைப்பையும், ஆழ்ந்த புரிந்து கொள்ளுதலும் தொடர்ந்து இடம் பெறுவதற்கான ஆர்த்தடாக்ஸ்
பிதாப்பிதாவின் சோர்வற்ற அர்ப்பணத்திற்குத் தன் வாழ்த்துக்களை வெளியிட்டு செய்தி அனுப்பியுள்ளார் திருப்பீட அதிகாரி கர்தினால்
Walter Kasper. Constantinopleன் Ecumenical பிதாப்பிதா முதலாம் Bartholemewன் 70வது
பிறந்த நாளையொட்டி, கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கான திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Kasper அனுப்பியுள்ள
வாழ்த்துச் செய்தியில், இரு சபைகளுக்கும் இடையேயான பேச்சு வார்த்தைகளில் ஒருவருக்கொருவர் இடையேயான
நட்புணர்வு, நம்பிக்கை மற்றும் திறந்த மனப்பான்மை வெளிப்பட்டு பயன் தருவது குறித்தும்
தன் மகிழ்ச்சியைத் தெரிவித்து பாராட்டியுள்ளார்.1940ஆம் ஆண்டு பிப்ரவரி 29ம் தேதி பிறந்த பிதாப்பிதா
முதலாம் Bartholemew இவ்வாண்டு தன் 70ம் பிறந்த நாளை மார்ச் முதல் தேதி சிறப்பிக்கிறார்.