நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட போர்த்துக்கல் மக்களுக்கு திருத்தந்தையின் அனுதாபச் செய்தி
பிப்.23,2010 போர்த்துக்கல் நாட்டிற்கு சொந்தமான Madeira தீவில் கடந்த வார இறுதியில்
ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோர்
குறித்த திருத்தந்தையின் அனுதாபங்களை அடங்கிய இரங்கற்தந்தியை போர்த்துக்கல்லுக்கு அனுப்பியுள்ளார்
திருப்பீடச்செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே.
போர்த்துக்கல்லின் Madeira
தீவின் Funchal நகரில் சனி காலை தொடங்கி ஞாயிறு வரை நீடித்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவால்
42 பேர் வரை உயிரிழந்தது மற்றும் 120க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளது குறித்து திருத்தந்தை
ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும், அவர்களுக்காக இறைவனிடம் செபிப்பதாகவும், Funchal ஆயர்
Antonio Josè Cavaco Carrilho வுக்கு திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச்செயலர் அனுப்பியுள்ள
தந்திச் செய்தி கூறுகிறது.