புதுசமூகத்தொடர்புசாதனங்கள்முன்வைக்கும்சவால்களும்,
வாய்ப்புகளும் - Christ பல்கலைக் கழகத்தில்கருத்தரங்கு
பிப்.22,2010 தேசிய அளவிலான கல்லூரிகள் மற்றும் சமூகத் தொடர்பு நிறுவனங்களைச் சேர்ந்த 500
மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள் பங்கு பெற்ற சமூகத் தொடர்பு குறித்த கருத்தரங்கு பெங்களூரின் Christ பல்கலைக் கழகத்தில் கடந்த
வார இறுதியில் இடம் பெற்றது.
"புது சமூகத் தொடர்பு சாதனங்கள் முன் வைக்கும் சவால்களும்,
வாய்ப்புகளும்" என்ற தலைப்பில் இடம் பெற்ற இவ்விருநாள் கருத்தரங்கானது, கத்தோலிக்கக்
கல்லூரிகளிடையே சமூகத்தொடர்புத் துறைகளின் வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்வதற்கான இந்திய ஆயர்
பேரவைக் கடந்த ஆண்டு துவக்கிய முயற்சியின் ஒரு பகுதியாகும். சமூகத் தொடர்புத் துறையை எப்படி சிறந்த முறையில் பயன் படுத்துவது என
கத்தோலிக்கக் கல்லூரி மாணவர்களின் துணையுடன் ஆராயும் கூடத்தை ஒவ்வோர் ஆண்டும் எடுத்து
நடத்தவும் இந்திய ஆயர் பேரவை தீர்மானித்துள்ளது.