2010-02-22 15:48:44

தமிழ் மக்களை குடியமர்த்துவதில் யாழ்ப்பாண தலத் திருச்சபையின் ஈடுபாடு


பிப்.22,2010 குடியிருப்புகள் இன்றி அலையும் தமிழ் மக்களை இலங்கையின் யாழ்ப்பாண பகுதியில் குடியமர்த்தி அவர்களின் வாழ்வையும், வாழ்வு ஆதாரகளையும் கட்டி எழுப்புவதில் சிரமங்களை எதிர்நோக்குவதாக தலத் திருச்சபை அறிவித்துள்ளது.
போரின் வெளிக் காயங்கள் சிறிது, சிறிதாக மறைந்து வருகின்ற போதிலும், அதன் உட்காயங்கள் ஆழமாக மக்களின் மனங்களில் பதிந்துள்ளதைக் காண முடிகிறது என்றார் யாழ்ப்பாண மறை மாவட்டத்தின் நீதி மற்றும் அமைதி அவைத்தலைவர் குரு பிரான்சிஸ் சேவியர் ஜெய சேகரன்.
யாழ்ப்பாண பகுதியில் 70 ஆயிரம் மக்கள் மீண்டும் குடியமர்த்தப்பட்ட போதிலும், பெரும் பான்மையினர் இன்னும் பிறர் வழங்கும் உதவிகளைச் சார்ந்தே வாழவேண்டிய நிலை உள்ளது என்றார் குரு ரோமன் நேசராஜா.கிராமங்களில் இருந்து நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணி இன்னும் முடிவடையாததால், எண்ணற்ற மக்கள் தங்கள் உறவினர் நண்பர் வீடுகளிலும், திருச்சபை மையங்களிலும் புகலிடம் தேடியுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.