Abu Sayyaf தீவிரவாதிகள்பொதுநிலையினர்பாதிக்கப்படாமலிருப்பதைஉறுதிசெய்யவேண்டும் - பிலிப்பின்ஸ் ஆயர் அழைப்பு
பிப்.22,2010 பிலிப்பின்ஸ் ராணுவத்துடன் நடத்திவரும் மோதல்களில் Abu Sayyaf தீவிரவாதிகள் பொது நிலையினர் பாதிக்கப் படாமலிருப்பதை
உறுதி செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் அந்நாட்டு ஆயர் ஒருவர். மோதல்கள் இடம் பெறும்
Jolo பகுதியின் ஆயர் Angelito Lampon விடுத்துள்ள விண்ணப்பத்தில், பொது மக்கள் பாதுகாப்பை ராணுவ தரப்பு உறுதி
செய்யும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், Abu Sayyaf தீவிரவாதிகளும் அவ்வுறுதி மொழியை
வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். அண்மையில் இருதரப்பினருக்கும் இடையிலான மோதல்களில்
பொது மக்கள் கொல்லப்பட்டது தொடர்பாக இவ்விண்ணப்பத்தை விடுத்துள்ளார் ஆயர் Lampon. இஸ்லாமியர்களை பெரும்பான்மையாகக் கொண்ட Jolo மறை
மாவட்டத்தின் 14 லட்சத்து 90 ஆயிரம் மக்கட்தொகையில் 2.4 விழுக்காட்டினரே கத்தோலிக்கர்.