2010-02-20 16:25:08

திருத்தந்தையின் வருடாந்திர தியானம் பிப்ரவரி 21ம் தேதி தொடங்குகிறது


பிப்.20,2010 இஞ்ஞாயிறு முதல் திருத்தந்தையும் வத்திக்கான் தலைமையகத்திலுள்ள அதிகாரிகளும் தங்களது வருடாந்திர தியானத்தைத் தொடங்குகின்றனர்.
பிப்ரவரி 21ம் தேதி முதல் 27ம் தேதி வரை வத்திக்கானில் நடைபெறும் இத்தியானத்திற்கான உரைகளை சலேசிய அருட்தந்தை Enrico dal Covolo வழங்குகிறார்.
இந்தத் தியான நாட்களில் புதன் பொது மறைபோதகம் உட்பட திருத்தந்தையின் அனைத்துப் பொது நடவடிக்கைகள் இடம் பெறாது.
ஆண்டவரே, புரிந்து கொள்ளும் இதயத்தை எனக்குத் தாரும் என்ற விவிலிய வசனம் இத்தியானத்தின் மையப் பொருளாகும். இந்நாட்களில் 17 தியான உரைகள் வழங்கப்படும்.59 வயதாகும் அருட்தந்தை Enrico dal Covolo , உரோம் பாப்பிறை சலேசிய பல்கலைகழகத்தில் பழங்காலக் கிறிஸ்தவ இலக்கியம் கற்பித்து வருகிறார். திருப்பீட வரலாற்று அறிவியல் குழு மற்றும் திருப்பீட விசுவாசக் கோட்பாட்டுப் பேராயத்தின் உறுப்பினராகவும் இருக்கிறார்.







All the contents on this site are copyrighted ©.