அருளாளர்களைப் புனிதர் நிலைக்கு உயர்த்துவது குறித்த கூட்டம்
பிப்.19,2010 ஆறு அருளாளர்களைப் புனிதர் நிலைக்கு உயர்த்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம்
வத்திக்கானில் திருத்தந்தையின் முன்னிலையில் இவ்வெள்ளியன்று நடைபெற்றது.
போலந்து
நாட்டுத் துறவறக்குரு Stanislao Soltys,(Order of Canons Regular Lateranense 1433-1489),
திருச்சிலுவை துறவு சபையின் கானாடா நாட்டு துறவி Andre Bessette(1845-1937),
ஸ்பெயினில் இயேசுவின் புதல்விகள் துறவு சபையைத் தொடங்கிய Candida Maria de Jesus Cipitria
y Barriola(1845-1912),
திருஇதயத்தின் புனித வளன் சகோதரிகள் சபையை நிறுவிய ஆஸ்திரேலியாவின்
திருச்சிலுவை மேரியின் MacKillop,(1842-1909),
திருஇதயத்தின் மறைக்கல்வி சகோதரிகள்
சபையை நிறுவிய இத்தாலியரான Giulia Salzano (1846-1929),
ஏழைக் கிளாராச் சபையைச்
சேர்ந்தவரும், இத்தாலியில் Camerino என்ற நகரில் புனித கிளாரா அடைபட்ட துறவு மடத்தை ஆரம்பித்தவருமான
அருட்சகோதரி Battista da Varano (1458- 1524)
ஆகிய ஆறு அருளாளர்கள் குறித்த கூட்டம்
நடைபெற்றது.
வருகிற அக்டோபர் 17ம் தேதி ஞாயிறன்று நடைபெறும் திருப்பலியில் இந்த
ஆறு அருளாளர்களும் புனிதர் நிலைக்கு உயர்த்தப்படுவார்கள் எனவும் திருப்பீடம் அறிவித்துள்ளது.