2010-02-18 15:09:34

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்காகச் செபிக்க வேண்டுமென ஹாங் காங் திருச்சபை வேண்டுகோள்


பிப்.18,2010 அரசியல் கருத்து வேறுபாடுகளால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் புத்தாண்டைக் கொண்டாட, அவர்களுக்காகச் செபிக்க வேண்டுமென ஹாங் காங் திருச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடந்த சனி முதல் இஞ்ஞாயிறு வரை அனுசரிக்கப்படும் சீன புத்தாண்டைத் தங்கள் குடும்பங்களோடு அனைவரும் கொண்டாட வேண்டும் எனவும், அரசியல் கைதிகளுக்கும், சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் எனவும் தங்கள் செபங்களை எழுப்புமாறு ஹாங் காங் திருச்சபை கத்தொலிக்கர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. சீனாவில் தற்போது நிலவி வரும் ஒரு கட்சி ஆட்சி முறையை மாற்றி, ஜன நாயக முறை இன்னும் அதிகமாக அந்நாட்டில் கொண்டு வரப்பட வேண்டுமெனப் போராடிய பலர் சிறையில் உள்ளனர் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது. இதேபோல், 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் Sichuan பகுதியில் சரிவரக் கட்டப்படாத பள்ளிகள் இடிந்ததால், 5,600மாணவர்களுக்கு மேல் கொல்லப்பட்டதை எதிர்த்து போராடியவர்களும் சிறையில் உள்ளனர் என்றும் செய்திகள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.