2010-02-17 15:24:00

Nargis புயலின் கொடூரத்திற்கு ஆளான மக்களை மையப்படுத்திய தவக்கால செய்தி - மியான்மார் ஆயர் Hsane Hgyi


பிப்.17,2010 2008ஆம் ஆண்டு மியான்மாரைத் தாக்கிய Nargis சூறாவளியில் வீடுகளை இழந்த மக்களுக்கு திருச்சபை இன்னும் உதவிகள் செய்து வருகிறதென ஆயர் Hsane Hgyi கூறியுள்ளார். இத்திருநீற்று புதனன்று காலை திருப்பலியில் தவக்கால செய்தி வழங்கிய Pathein மறை மாவட்ட ஆயர் Hgyi, புயலின் கொடூரத்திற்கு ஆளான மக்களை மையப்படுத்திய தன் செய்தியில் அம்மக்களுக்கு இத்தவக்காலத்தில் இன்னும் அதிக அளவில் உதவ கத்தோலிக்கர்களைக் கேட்டுக் கொண்டார். Nargis புயலில் 1,40,000 பேர் உயிரிழந்தனர் என்றும் இன்னும் ஐந்து லட்சம் மக்கள் வீடுகளின்றி துன்புறுகின்றனர் என்றும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.