தேர்தலில் வாக்களிப்பது கத்தோலிக்கர்களின் கடமை என்கிறது இலங்கை திருச்சபை.
பிப். 16. இலங்கையில் வரும் ஏப்ரல் 8ந்தேதி இடம்பெற உள்ள பொதுத்தேர்தலில் அனைத்துக்
கத்தோலிக்கர்களும் பொறுப்புடனும் துடிப்புடனும் பங்கேற்க வேண்டும் என அந்நாட்டு தலத்திருச்சபை
அழைப்பு விடுத்துள்ளது.
வாக்களிப்பதற்கான தங்கள் ஜனநாயக கடமையை எற்று அனைத்துக்
கத்தோலிக்கர்களும் செயல்படவேண்டும் என ஊக்கமளித்துச் செயல்பட உள்ளதாகக் கூறினார் காரித்தாஸ்
இலங்கையின் தேசிய இயக்குனர் குரு ஜார்ஜ் சிகாமணி.
வாக்குப்பதிவில் பங்கேற்கவேண்டியதன்
அவசியம் குறித்த வழிகாட்டுதல்களுடன் கத்தோலிக்கர்களிடையே ஏடு ஒன்றை விநியோகிக்க காரித்தாஸ்
இலங்கை திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார் குரு சிகாமணி.
வாக்குப்பதிவு அமைதியான
முறையில் இடம்பெற வேண்டும் என்ற நோக்குடன், தவக்காலத்தில் பல்மத ஜெபவழிபாடுகள் மூலம்
இறைவனிடம் செபிக்கப்படும் எனவும் கூறினார் இலங்கை காரித்தாஸ் இயக்குனர்.