2010-02-11 16:08:37

அகில உலக நோயாளர்  தினத்தை முன்னிட்டு, பாகிஸ்தானில் ஏழைகளுக்கான கண் பார்வை சோதனை முகாம்


பிப்.11,2010 இவ்வியாழனன்று லூர்து அன்னையின் திருவிழாவையொட்டி அனுசரிக்கப்படும் அகில உலக நோயுற்றோர் தினத்தை முன்னிட்டு, பாகிஸ்தான் கிழக்கு பஞ்சாப் மாநிலத்திலுள்ள Renala Khurd என்ற ஊரிலுள்ள மரியன்னையின் கோவில் கெபிக்கருகே ஏழைகளுக்கான கண் பார்வை சோதனை முகாம் ஒன்று இப்புதனன்று நடைபெற்றது.
கடந்த இரு ஆண்டுகளாய் லூர்து அன்னையின் திருவிழாவையொட்டி இந்த முகாமை நடத்தி வரும் அருட்தந்தை James Archangelus இந்த முகாமினால் அதிகம் பலனடைவது வசதியற்ற முஸ்லிம் மக்களே என்று கூறினார். இருபது ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட லூர்து அன்னையின் கெபிக்கு கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் வருவது வழக்கமென்றும், இந்தத் திருநாளையொட்டி இரு ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்த மருத்துவ உதவியை முஸ்லிம் பெண்கள் அதிகம் நாடுவது தனக்குப் பெரும் நிறைவைத் தருவதாகவும் அருட்தந்தை James கூறினார்.







All the contents on this site are copyrighted ©.