2010-02-10 15:54:04

திருத்தந்தையின் மால்ட்டா திருப்பயணம் குறித்த விபரங்கள்


பிப்.10,2010 புனித பவுல், மால்ட்டாவில் கரையிறங்கியதன் 1950ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 17, 18 தேதிகளில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அந்நாட்டிற்குத் திருப்பயணம் மேற்கொள்வது குறித்த விபரங்கள் இப்புதனன்று வெளியிடப்பட்டன.
ஏப்ரல் 17ம் தேதி உரோம் நேரம் மாலை 3.25 மணிக்கு உரோம் சர்வதேச விமானநிலையத்திலிருந்து புறப்பபடும் திருத்தந்தை, மாலை ஐந்து மணியளவில் மால்ட்டாவின் Luqa சர்வதேச விமானநிலையம் அடைந்து வரவேற்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்.
பின்னர் தலைநகர் Vallettaவில் குடியரசுத் தலைவர் மாளிகையில் அவரைச் சந்தித்த பின்னர், Rabat விலுள்ள புனித பவுல் குகையைப் பார்வையிடுவார் திருத்தந்தை.
18ம் தேதி ஞாயிறன்று Floriana வின் Granai வளாகத்தில் திருப்பலி நிகழ்த்தும் திருத்தந்தை, மால்ட்டா திருப்பீடத் தூதரகத்தில் ஆயர்களுடன் மதிய உணவு அருந்துவார்.மாலை 4.45 மணிக்கு Kalkara துறைமுகத்தைப் பார்வையிட்ட பின்னர் கடற்கரைப் பகுதியில் மால்ட்டா இளையோரைச் சந்திப்பார், பின்னர் உரோமைக்குப் புறப்படுவார் திருத்தந்தை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.