2010-02-10 15:55:59

Croatiaவின் இயேசு சபை குரு Ante Gabricஐப் புனிதராக்கும் முயற்சி


பிப்.10,2010 Croatia வை உலகத்தின் பிற நாடுகளைப் பார்ப்பதற்கு, முக்கியமாக மறைபரப்பு பணிக்கு உகந்த இந்தியா போன்ற நாடுகளைப் பார்ப்பதற்கு வழிவகுத்தவர் இயேசு சபை குரு Ante Gabric என்று கூறினார் Croatia வின் இயேசுசபைத் தலைவர் அருட்தந்தை Ivan Koprak. இச்செவ்வாய் வரை இந்தியாவில் ஒரு வாரமாய் பயணம் செய்த அருட்தந்தை Koprak மேற்கு வங்க மாநிலத்தில் அருட்தந்தை Gabric பணி புரிந்த பல இடங்களையும் பார்வையிட்டார். 1988ஆம் ஆண்டு தன் 73வது வயதில் இந்தியாவில் பல ஆண்டுகள் பணி செய்து அங்கேயே உயிர் துறந்த அருட்தந்தை Gabric பற்றிய குறிப்புகளை Croatiaவில் உள்ள கர்தினால் Josip Bozanic இடம் அளித்து, அருட்தந்தை Gabric ஐப் புனிதராக்கும் முயற்சிகளை தான் ஆரம்பிக்க உள்ளதாக இயேசுசபைத் தலைவர் அருட்தந்தை Ivan Koprak கூறியுள்ளார். அருட்தந்தை Gabric கத்தோலிக்கருக்கு மட்டுமல்லாது, பலருக்கும் பணி புரிந்தார் என்றும், அவரது எடுத்துக்காட்டான வாழ்வால் ஈர்க்கப்பட்ட முஸ்லிம்களும் அவரை ஒரு புனிதமான சாதுவென அழைத்தனர் என்றும், அவருடன் பணிபுரிந்த அருட்தந்தை Sylvester Xavier கூறினார்.







All the contents on this site are copyrighted ©.