பிரான்சின் லூர்து அன்னை திருத்தலத்தில் விடாமுயற்சியுடனும் நம்பிக்கையுடனும் செபிக்கும்
ஒவ்வொருவரும் தங்களில் குணப்படுத்தலை உணர முடியும்- மருத்துவர்
பிப்.09,2010 பிரான்சின் லூர்து அன்னை திருத்தலத்தில் விடாமுயற்சியுடனும் நம்பிக்கையுடனும்
செபிக்கும் ஒவ்வொருவரும் தங்களில் குணப்படுத்தலை உணர முடியும் என்றார் அந்நாட்டு மருத்துவர்
ஒருவர். லூர்து நகர் மருத்துவக் குழுவின் முன்னாள் தலைவரான மருத்துவர் பாட்ரிக் தியெலியெ
அண்மையில் வழங்கிய பேட்டியொன்றில், லூர்து நகரில் 67 குணப்படுத்தல்கள் புதுமையான முறையில்
இடம் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ சான்றுகள் உள்ளன என உரைத்தார். இன்றைய நவீன உலகில்
மருத்துவ உதவிகளுக்கும் அப்பாற்பட்டு வாழ்வின் காயங்கள், ஒழுக்கரீதி சார்ந்த துன்பங்கள்
மற்றும் மனரீதியான ஆன்மீகரீதியான ஒழுங்குமுறைக்கானக் குணப்படுத்தல்களும் தேவைப்படுகின்றன
என்றார் தியெலியெ. இத்தகைய குணப்படுத்தல்கள்களை விசுவாசம், நம்பிக்கை மற்றும் செபத்தின்
மூலமே பெற முடியும் எனவும் மருத்துவர் தியெலியெ கூறினார்.