திருத்தந்தை : விளையாட்டுகள், மக்களிடையே அமைதியான புரிந்து கொள்ளுதலும் புதிய அன்புக்
கலாச்சாரமும் ஏற்பட உதவும்
பிப்.05,2010 கானடாவில் நடைபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில்
கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்களுக்கு, அவை, தங்கப் பதக்கங்களைவிட இன்னும் அதிகமான
நன்மைகளைக் கொடுக்கும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறியுள்ளார்.
இம்மாதம்
12 முதல் 28 வரை பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்கூவரில் நடைபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக்
விளையாட்டுப் போட்டிகளுக்கென வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை, விளையாட்டுகள்,
மக்களிடையே அமைதியான புரிந்து கொள்ளுதலும் புதிய அன்புக் கலாச்சாரமும் ஏற்பட உதவும் என்று
குறிப்பிட்டுள்ளார்.
இவ்விளையாட்டுகள் நடைபெறும் காலத்தில் கிறிஸ்தவர்கள், திருவழிபாடுகளில்
கலந்து கொள்ளவும் சாட்சியம் பகரவும் அவர்களைத் தூண்டுவதற்கென, “தங்கத்தைவிட அதிகம்” என்ற
தலைப்பில் கானடா கிறிஸ்தவ சபைகள் எடுத்துள்ள முயற்சிக்குத் தனது வாழ்த்தையும் பாராட்டையும்
தெரிவித்துள்ளா திருத்தந்தை.