2010-02-02 17:15:10

மத சுதந்திரம் மதிக்கப்பட்டால் மட்டுமே பிலிப்பைன்சின் தென் பகுதியில் அமைதியைக் கொணர முடியும் - உண்மை அறியும் குழு


பிப்.02,2010 மத சுதந்திரம் மதிக்கப்பட்டால் மட்டுமே பிலிப்பைன்சின் தென் பகுதியில் அமைதியைக் கொணர முடியும் எனக்கூறுகிறது அந்நாட்டு ஆயர்களால் நியமிக்கப்பட்ட உண்மை அறியும் குழு.

இசுலாமியத் தாக்குதல்கள் இடம் பெற்று வரும் மின்டனாவோ பகுதியில் மக்கள் சுதந்திரமாக வழிபட அனுமதிக்கப்படுவதும் மதத்தலைவர்கள் அமைதிக்கான முக்கிய பொறுப்பேற்பதுமே இணக்க வாழ்வுக்கு இட்டுச் செல்லும் என்கிறது இவ்வுண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை.

மக்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்கள் மற்றும் ஏனைய ஆய்வுகள் மூலம் இதனைத் தெரிய வந்துள்ளதாககக் கூறினார் இக்குழுவின் இயக்குனர் இயேசு சபை குரு ஆல்பர்ட் அலெஹோ.








All the contents on this site are copyrighted ©.