அயர்லாந்து அரசியல் கட்சிகள் நீதியான அதிகாரம் மற்றும் அதிகாரப் பரிமாற்றம் குறித்தவைகளில்
ஓர் ஒருங்கிணைந்த உடன்பாட்டிற்கு வருமாறு கிறிஸ்தவ சபைகள் அழைப்பு
சன.30,2010 அயர்லாந்தில், நீதியான அதிகாரம் மற்றும் அதிகாரப் பரிமாற்றம் குறித்தவைகளில்
ஓர் ஒருங்கிணைந்த உடன்பாட்டிற்கு வருமாறு அந்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும்
அழைப்பு விடுத்துள்ளன கிறிஸ்தவ சபைகள். அயர்லாந்தின் கத்தோலிக்கப் பிதாப்பிதா கர்தினால்
Seán Brady உட்பட Presbyterian, மெத்தோடிஸ்ட் என அந்நாட்டின் நான்கு முக்கிய கிறிஸ்தவ
சபைகளின் தலைவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. வடஅயர்லாந்து
நாடாளுமன்றத்திற்கான நீதியான அதிகாரம் மற்றும் அதிகாரப் பரிமாற்றம் குறித்த பேச்சுவார்த்தைகளில்
அனைத்து அரசியல் கட்சிகளும் ஈடுபட்டுள்ளது குறித்த பாராட்டையும் அக்கிறிஸ்தவத் தலைவர்கள்
வெளியிட்டுள்ளனர். தங்களது பிரதிநிதிகள் சுமுகமான ஓர் உடன்பாட்டிற்கு விரைவில் வருவார்கள்
என்று வடஅயர்லாந்து மக்கள் எதிர்பார்ப்பதையும் அவர்கள் அவ்வறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளனர்.