பெத்லகேம் பசிலிக்காவிலுள்ள குழந்தை இயேசு திருவுருவம் வரலாற்றில் முதன்முறையாக வேறு
இடத்திற்குத் தரிசனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது
சன.29,2010 புனித பூமியின் பெத்லகேம் பசிலிக்காவிலுள்ள குழந்தை இயேசு திருவுருவம் வரலாற்றில்
முதன்முறையாக அவ்விடத்தை விட்டு வேறு இடத்திற்குத் தரிசனைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
பெத்லகேம்
பசிலிக்காவுக்குப் பொறுப்பான அருள்தந்தை Jerzy Kraj, இத்தாலியின் புனித பாத்ரே பியோ
பசிலிக்கா அமைந்துள்ள சான் ஜொவான்னி ரொத்தோந்தோவிற்கு மரத்தினாலான அந்தச் சிறிய குழந்தை
இயேசு திருவுருவத்தை இவ்வியாழனன்று கொண்டு வந்துள்ளார்.
இந்தத் திருவுருவமானது
வருகிற பிப்ரவரி 6ம் தேதி வரை சான் ஜொவான்னி ரொத்தோந்தோவைச் சுற்றியுள்ள இடங்களுக்கு
எடுத்துச் செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழந்தை இயேசு திருவுருவமானது,
1921ம் ஆண்டு ஸ்பெயினின் Olot ல் பெத்லகேம் பசிலிக்காவுக்கெனச் செய்யப்பட்டது.