அமைதி மற்றும் முன்னேற்றத்தைக் கைக்கொண்டு செயல்பட அதிபர் மகிந்த ராஜபக்வுக்கு இலங்கை
ஆயர் பேரவைத் தலைவர் அழைப்பு.
சன.28,2010 இலங்கை நாட்டின் இன்றைய முக்கிய தேவைகளாக அமைதி மற்றும் முன்னேற்றத்தைக் கைக்கொண்டு
செயல்பட வேண்டுமென அதிபர் மகிந்த ராஜபக்வுக்கு அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் வியான்னி
பெர்னாண்டோ அழைப்பு விடுத்துள்ளார்.
புதிதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள
அரசுத்தலைவர் நாட்டின் அமைதி மற்றும் வளர்ச்சிக்காக உழைப்பார் என நம்புவோமாக என Fides
செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார் ஆயர்.
இன்றையச் சூழல்கள் அமைதியும்
ஜனநாயக வழிகளும் நிறைந்ததாக மாறும் என நம்புவதாகவும் இந்நாட்டின் வருங்காலம் பிரகாசமானதாய்
குறிப்பாக சிறுபான்மை தமிழர் பொருத்தவரையில் நல்ல தீர்வைத் தருவதாய் இருக்கும் என ஆவல்
கொள்வதாகவும் கூறினார் அவர்.
இதற்கிடையே, இதே கத்தோலிக்க Fides செய்தி நிறுவனத்திற்கு
பேட்டியளித்த யாழ்ப்பாணத்தின் அமைதி மற்றும் ஒப்புரவு மையத்தின் இயக்குனர் அமலமரி தியாகிகள்
சபை குரு பிரவின், தமிழர்கள் நம்பிக்கை இழந்து வருவதாகவும் இருபது விழுக்காட்டினரே வாக்களிக்க
முடிந்ததில் இது தெரிவதாகவும் எடுத்துரைத்தார்.