ஹெயிட்டியின்பல்வேறு தேவைகளுக்குநிதி உதவிவழங்கவத்திக்கானின்தபால் தலை
சன.27,2010 வத்திக்கானின் தபால் தலை மற்றும் நாணய வெளியீட்டு அலுவலகம் வெளியிடும் அடுத்த தபால்
தலைகளின் விற்பனையிலிருந்து ஹெயிட்டியின் பல்வேறு தேவைகளுக்கு நிதி உதவி வழங்கப்படும்
என அவ்வலுவலகம் அறிவித்துள்ளது. Montorellaவின் அருள் நிறை மரியன்னை ஆலயத்தின் 1500வது ஆண்டு
நிறைவையொட்டி வெளியிடப்படும் இத்தபால்தலை, ஏற்கனவே திட்டமிட்டபடி வெளியிடப்படும் என்றும், பிரசுரமாகும்
அனைத்து தபால் தலைகளும் விற்கப்பட்டால், அந்த விற்பனையிலிருந்து கிடைக்கும் ஏறத்தாழ இரண்டு
லட்சம் டாலருக்கும் அதிகமான தொகை ஹெயிட்டியின் நிவாரண உதவிக்கென வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்
பட்டுள்ளது. திருத்தந்தையர் இரண்டாம் ஜான் பாலும், 16ஆம் பெனெடிக்ட்டும் திருத்தந்தையர்களாகப்
பொறுப்பேற்றதும் வத்திக்கானிலிருந்து 40மைல் தூரத்தில் அமைந்துள்ள மரியன்னையின் இக்கோவிலைச் சென்று தரிசித்தனர் என்பது
குறிப்பிடத் தக்கது.