2010-01-27 15:30:03

புனித பூமியில் உள்ளவர்களிடம் சமாதானம் குறித்த கருத்துக் கணிப்பு


சன.27,2010 புனித பூமியில் உள்ள தலத் திருச்சபை அங்குள்ளவர்களிடம் எதிர்காலத்தில் உருவாகக்கூடிய சமாதானம் குறித்த கருத்துக் கணிப்பொன்றை மேற்கொண்டுள்ளது. இவ்வாண்டு அக்டோபர் மாதத்தில் வத்திக்கானில் நடைபெறவுள்ள மத்திய கிழக்குப் பகுதிக்கான முதல் ஆயர் மாமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள அறிக்கைக்கென இந்த கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. "மத்திய கிழக்கு திருச்சபை: ஒருமைப்பாடும், சாட்சியமும்" என்பது இந்த ஆயர் மாமன்றத்தின் மையக் கருத்தாக அமையும் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது. அரேபியம், பிரெஞ்ச், ஆங்கிலம், இத்தாலியம் ஆகிய மொழிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தக் கருத்துக்கணிப்பில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாய் உள்ள இந்தப் பகுதியில் சமயங்களுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்தும் வழிகளைக் கண்டறிய முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன என்று மேலும் கூறப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.