2010-01-26 13:52:33

பிரிட்டனில் ஏழ்மையில் வாடும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது - சேவ் த சில்ரன் கவலை


சன.26,2010 பிரிட்டனில் ஏழ்மையில் வாடும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கவலையை வெளியிட்டுள்ளது சேவ் த சில்ரன் என்ற பிறரன்பு அமைப்பு.
2004ம் ஆண்டில் பிரிட்டனில் ஏழ்மையில் வாடிய குழந்தைகளின் எண்ணிக்கை 14 இலட்சத்து 60 ஆயிரமாக இருந்தது. அது 2008ம் ஆண்டில் 17 இலட்சமாக உயர்ந்துள்ளது எனக்கூறும் இவ்வமைப்பு, இங்கிலாந்தின் குழந்தைகளுள் 13 விழுக்காட்டினர் ஏழ்மை நிலையில் வாடுவதாகவும் தெரிவிக்கிறது.
நகர்வாரியாகப் பார்க்கும் போது இலண்டன் வாழ் இளையோருள் 19 விழுக்காட்டினர் ஏழ்மையில் வாடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.