2010-01-25 14:24:45

கேரளாவின் சீரோ மலங்கரா ரீதி சபையில்  இரு புதிய மறைமாவட்டங்களும் நான்கு புதிய ஆயர்களும்.


சன.25,2010. திருத்தந்தை வழங்கியுள்ள ஒப்புதலின்படி, Pathanamthitta மற்றும் Puthur மறை மாவட்டங்களை புதிதாக உருவாக்கி மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் Yoohanon Mar Chrysostomஐ புதிய Puthanamthitta மறைமாவட்டத்திற்கும், Bathery மறைமாவட்ட ஆயர் Geevarghese Mar Divannasiosஐ புதிய Puthur மறைமாவட்டத்திற்கும் மாற்றி நியமனம் செய்துள்ளது கேரளாவின் சீரோ மலங்கரா ரீதி திருச்சபை.

மார்த்தாண்டத்திற்கான புதிய ஆயராக குரு Vincent Kulapuravilai அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை திருவனந்தபுரம் சீரோ மலங்கரா பெருமறை மாவட்டத்தின் துணை ஆயராக இருந்த ஆயர் Joseph Mar Thomas, Bathery மறை மாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரம் சீரோ மலங்கரா பெருமறைமாவட்டத்தின் துணை ஆயராக குரு. Samuel Kattukallil, திருவல்லா சீரோ மலங்கரா பெருமறைமாவட்டத்தின் துணை ஆயராக குரு. Stephen Thottathil, சீரோ மலங்கரா ரீதி தலைமைப் பீடத்தின் பணி ஆயராக குரு. Anthony Valiyavilayil  ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். 








All the contents on this site are copyrighted ©.