எத்தியோப்பியாவில்துன்புறும் குழந்தைகளுக்கு உதவுவதற்கென64லட்சம்டாலர்களைவழங்கியுள்ளதுபிரிட்டன்
சன.25,2010 எத்தியோப்பியாவில் போதிய சத்துணவின்மையால் துன்புறும் குழந்தைகளுக்கு உதவுவதற்கென 64 லட்சம் டாலர்களை
வழங்கியுள்ளது பிரிட்டன். போதிய சத்துணவின்றி துன்புறும் 80,000 எத்தியோப்பிய குழந்தைகளுக்கென
இதனை UNICEF அமைப்பு மூலம் வழங்கியுள்ளது அந்நாடு. இவ்வாண்டில் எத்தியோப்பியாவின் அவசர
கால உணவு உதவிகளுக்கென மேலும் ஒரு கோடியே 47 லட்சம் டாலர் தேவைப்படுவதாக அறிவித்துள்ளது குழந்தைகளுக்கான அவசர
கால நிதி அமைப்பான UNICEF.