ஹைய்ட்டி நிலநடுக்கத்தில் இறந்த பேராயர் மியோட்டினுக்கு திருத்தந்தை இரங்கல் செய்தி
சன.23,2010 ஹைய்ட்டி நிலநடுக்கத்தில் இறந்த பேராயர் மியோட்டின் அடக்கச் சடங்கிற்கென,
அந்நாட்டுக்கானத் திருப்பீடத் தூதுவர் பேராயர் பெர்னதித்தோ அவுசாவுக்குத் திருத்தந்தையின்
பெயரில் செய்தி அனுப்பியுள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே.
இன்னும்,
இதில் அறுபதுக்கும் அதிகமான ஐ.நா பணியாளர்கள் இறந்துள்ளதையொட்டி ஐ.நா.பொதுச் செயலர்
பான் கி மூனுக்குத், திருத்தந்தையின் பெயரில் செய்தி அனுப்பியுள்ள கர்தினால் பெர்த்தோனே,
ஐ.நாவுக்காகத் தன்னலமற்ற சேவையாற்றி இறந்துள்ள அனைவருக்குமான திருத்தந்தையின் செபத்தைத்
தெரிவித்துள்ளார்.
அத்துடன், உலகின் பல நாடுகளில் மோதல்களைத் தவிர்க்கவும், நாடுகளை
மீண்டும் கட்டி எழுப்புவதற்கென அமைதி காப்புப்பணிகளிலும் ஈடுபட்டுள்ள ஐ.நா.பணியாளர்களைத்
திருத்தந்தை பாராட்டுவதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹைய்ட்டிக்கான
ஐ.நா. பொதுச் செயலரின் சிறப்புப் பிரதிநிதி ஹெடி அன்னாபி, அவரின் உதவியாளர் லூயிஸ் த
கோஸ்டா, இன்னும் பல அமைதி காப்புப் படையினர் இந்த நிலநடுக்கத்தில் இறந்துள்ளனர்.