ஹைய்ட்டி குடியரசுத் தலைவர் மற்றும் ஆயர் பேரவைத் தலைவருக்குத் திருத்தந்தை கடிதங்கள்
சன.23,2010 நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹைய்ட்டி மக்களுடனான தமது ஒருமைப்பாட்டுணர்வைத்
தெரிவிக்கும் கடிதங்களை அந்நாட்டு குடியரசுத் தலைவர் René Préval மற்றும் ஆயர் பேரவைத்
தலைவர் பேராயர் லூயிஸ் கெப்ருவுக்கு அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
பாதிக்கப்பட்டுள்ள
மக்களுக்கான உதவிகள் அனைத்து நாடுகளிலிருந்தும் கிடைப்பதற்காகச் செபிப்பதாகவும், பலநேரங்களில்
தங்கள் வாழ்வையும் பணயம் வைத்து மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள உள்ளூர் மற்றும் வெளிநாட்டு
மக்களுக்குத் தமது நன்றியைத் தெரிவிப்பதாகவும் அரசுத் தலைவர்க்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்
திருத்தந்தை.
மேலும், ஹைய்ட்டி ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் கெப்ருவுக்கு எழுதியுள்ள
கடிதத்தில், இந்த இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுடனான தனது ஆன்மீக ரீதியிலான
ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
இதில் இறந்தவர்கள், குறிப்பாக
போர்ட் ஆப் பிரின்ஸ் பேராயர் செர்ஜ் மியோட், குருக்கள், இருபால் துறவியர், குருத்துவ
மாணவர்கள் ஆகியோரின் ஆன்மா நிறைசாந்தியடையத் தான் செபிப்பதாகவும் உறுதி கூறியுள்ளார்
திருத்தந்தை