குடும்ப மதிப்பீடுகளுக்கு எதிராகச் செயல்படும் வேட்பாளர்களைப் புறக்கணிக்குமாறு பிலிப்பைன்ஸ்
ஆயர்கள் வலியுறுத்தல்
சன.23,2010 பிலிப்பைன்சில் இவ்வாண்டில் நடைபெறவிருக்கின்ற பொதுத் தேர்தல்களில், கருக்கலைப்பு,
காருண்யக்கொலை, குடும்பக்கட்டுபாடு போன்றவற்றை எதிர்க்கும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு
அந்நாட்டு ஆயர்கள் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குடும்பம் மற்றும் வாழ்வு
குறித்த 2010ம் ஆண்டு தேர்தலுக்கான வழிமுறைகள் என்ற தலைப்பில் கையேடு வெளியிட்டுள்ள,
ஆயர் பேரவையின் குடும்பம் மற்றும் வாழ்வுக்கான ஆணையம், குடும்ப மதிப்பீடுகளுக்கு எதிராகச்
செயல்படும் வேட்பாளர்களைப் புறக்கணிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், அமெரிக்க
ஐக்கிய நாட்டில் பெரும்பாலான மக்கள், குறிப்பாக இளையோர் கருக்கலைப்பு தவறானது என்று
உணர்வதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது.