2010-01-23 14:43:33

ஈராக்கில் கிறிஸ்தவர்க்கு எதிராக இடம் பெறும் அண்மை வன்முறைகள் குறித்து ஊடகங்களும் அரசியல் தலைவர்களும் பாராமுகம்- பாக்தாத் பேராயர் கவலை


சன.23,2010 ஈராக்கில் கிறிஸ்தவர்க்கு எதிராக இடம் பெறும் அண்மை வன்முறைகள் குறித்து ஊடகங்களும் அரசியல் தலைவர்களும் பாராமுகமாய் இருப்பது குறித்த கவலையை தெரிவித்துள்ளார் பாக்தாத் பேராயர் ஜான் ஸ்லைமான்.

அண்மையில் இடம் பெற்ற இரண்டு கொலைகள் குறித்துப் பேசிய பேராயர் ஸ்லைமான், மொசூலிலும் மற்றும் பிற பகுதிகளிலும் கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவது குறித்து காணப்படும் மௌனச் சுவர் தகர்க்கப்படுமாறு கேட்டுக் கொண்டார்.

கடந்த டிசம்பரிலிருந்து இதுவரை பத்து கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் கிறிஸ்தவ மாணவர்களை அழைத்துச் சென்ற பள்ளிப் பேரூந்து குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.