சன.20,2010 ஹெயிட்டியின் நிலநடுக்கத்தில் உயிரிழந்த Port au Prince உயர்மறைமாவட்டத்தின்
பேராயர் Serge Miotன் அடக்கச் சடங்குகள் இச்சனிக்கிழமையன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த
நில நடுக்கத்தில் தரை மட்டமான பல கோவில்கள், பள்ளிகள், துறவு மடங்கள், குருமாணவர் இல்லங்கள்
ஆகியவற்றில் நூற்றுக்கும் மேலான குருக்கள், கன்னியர், குரு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்
என்றும் இன்னும் பலரைப் பற்றிய தகவல்கள் தெளிவாகக் கிடைக்கவில்லை எனவும் செய்திக்குறிப்பொன்று
கூறுகிறது. Port au Prince பெருமளவில் சேதமடைந்துள்ளது உண்மை என்றாலும், சுற்றுப் பகுதிகளில்
பலவும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதால், அவைகளுக்கும் விரைவில் உதவிகள் கிடைக்க வழிசெய்யப்பட
வேண்டுமென ஹெயிட்டியில் உள்ள கத்தோலிக்க ஆயர்கள், குருக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என
செய்திகள் கூறுகின்றன.