சன.20,2010 அண்மையில் திருத்தந்தையால் Jashpur மறைமாவட்டத்தின் ஆயராக நியமனம் பெற்ற Emmanuel Kerketta வருகிற பிப்ரவரி 2ம் தேதி
காலை 8.30 மணி அளவில் Kunkuriயிலுள்ள செபமாலை அன்னைப் பேராலயத்தில் ராஞ்சி பேராயர் கர்தினால்
Telespore Toppo அவர்களால் ஆயராகத் திருநிலைப்படுத்தப்படுவார் என செய்திக்குறிப்பு ஒன்று கூறுகிறது.
இந்தத் திருநிலைப்படுத்தப்படும் நிகழ்வில் Raipur உயர்மறைமாவட்ட பேராயர் Joseph Augustine Charanakunnel
மற்றும் Raigarh மறைமாவட்ட ஆயர் Paul Toppo ஆகியோரும் கலந்து கொள்வர் என அச்செய்திக்
குறிப்பு மேலும் கூறுகிறது.