சன.19,2010 இவ்வாண்டு அக்டோபர் 10 முதல் 24 வரை வத்திக்கானில் இடம்பெற உள்ள மத்திய கிழக்கு நாடுகளுக்கான
சிறப்பு ஆயர் மாமன்றம் குறித்த பத்திரிக்கையாளர் கூட்டம் இச்செவ்வாயன்று திருப்பீடத்தில்
இடம் பெற்றது. "மத்திய கிழக்கு நாடுகளின் திருச்சபையின் ஐக்கியமும், சான்றும். நம்பிக்கை
கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர்." என்பதை தலைப்பாகக் கொண்டு இடம்
பெற உள்ள இவ்வாயர் மாமன்றம் குறித்து ஆயர் மாமன்றத்தின் பொதுச் செயலர் பேராயர் Nikola Eterovic அதன்
நேரடி துணைச் செயலர் குரு Fortunato Frezza ஆகியோர் விவரங்களை வழங்கினர். வரலாற்று நிகழ்வுகளின்
பாதிப்புகளைக் கொண்ட மத்திய கிழக்கு தலத் திருச்சபை, தன் இருப்பையும், தன் வருங்காலத்தையும் மேம்படுத்த
உதவுவதாக ஆயர் மாமன்றக் கூட்டம் இருக்கும் என்ற நம்பிக்கை வெளியிடப்பட்டது.