ஒவ்வொரு நாளும் மூன்று பேரையாவது சிரிக்க வைப்பது நல்லது. நிகழ்காலம்
நலமாய் இருக்க, கடந்த காலத்துடன் சமாதானம் செய்துகொள்வது நல்லது. புறம் பேசுவது, கசப்பான
எண்ணங்களை உள்ளத்தில் வளரவிடுவது இவைகளை விடுத்து, ஆக்கப்பூர்வமாய் நிகழ்காலத்தில் வாழ்வது
நல்லது. உன் வாழ்வின் மகிழ்வுக்கு நீ மட்டுமே பொறுப்பு வேறு யாரும் இல்லை என்பதை விரைவில்
கற்றுக்கொள்வது நல்லது. உன் வேலையை விட உன் குடும்பமும் நண்பர்களும் முக்கியம். நீ
உடல்நலமின்றி இருக்கும் போது உன் வேலை உனக்கருகில் இருந்து கவனித்துக்கொள்ளாது என்பதையும்
உணர்ந்து வாழ்வது நல்லது.
வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நாம் அனைவரும் மாணவ,
மாணவியர். பிரச்சனைகள் இந்தப் பள்ளியின் பாடத்திட்டத்தில் உண்டு. அந்தப் பிரச்சனைகளை
விட, அவைகளைத் தீர்க்கும் வழிகளை மனப்பாடம் செய்து கொள்வது நல்லது.