ஒருலட்சம்கிறிஸ்தவஐக்கியபுதுமொழிபெயர்ப்புலூக்காநற்செய்திப்பிரதிகள்
- கத்தோலிக்கத்திருச்சபை,ஆங்கிலிக்கன்கிறிஸ்தவசபை கூட்டு முயற்சி
சன.19,2010 அயர்லாந்தின் கத்தோலிக்கத் திருச்சபையும் ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபையும் இணைந்து அச்சிட்ட ஒரு
லட்சம் கிறிஸ்தவ ஐக்கிய புது மொழிபெயர்ப்பு லூக்கா நற்செய்திப் பிரதிகள் அந்நாட்டு மக்களுக்கு விநியோகிக்கப்பட
உள்ளன. கிறிஸ்தவ ஐக்கியத்தை முன்னேற்றவும், மக்களிடையே நற்செய்தி வாசிக்கும் பழக்கத்தை
ஊக்குவிக்கவும் எடுக்கப்பட்டுள்ள இந்நடவடிக்கை குறித்து எடுத்துரைத்த Dublin பேராயர்
Diarmuid Martin, நற்செய்தி குறித்த அறிவு என்பது ஒருவன் கிறிஸ்தவனாக இருப்பதன் முக்கியக் கூறுகளுள் ஒன்று
என்றுரைத்தார். அயர்லாந்து கத்தோலிக்கத் திருச்சபையும், ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபையும் இணைந்து
பிரான்சின் Taize கிறிஸ்தவ ஐக்கிய ஜெபக் கூடத்திற்கு பயணம் செய்ய உள்ளதும் பேராயரால்
அறிவிக்கப்பட்டது.