Nargis பெரும்புயலால்பாதிக்கப்பட்டமக்கள்தங்கள்வாழ்வைமீண்டும்துவக்க கத்தோலிக்ககாரித்தாஸ்அமைப்பு உதவி
சன.19,2010. 2008ஆம் ஆண்டில் Nargis பெரும்புயலால் பாதிக்கப்பட்ட மக்களுள் 85,000 பேர்
தங்கள் வாழ்வை மீண்டும் துவக்க உதவ இவ்வாண்டில் 26 லட்சம் டாலர் தேவைப்படுவதாக அறிவித்துள்ளது
காரித்தாஸ் அமைப்பு. இதுவரை Myanmarல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடுகளைக்
கட்டவும், உள் கட்டுமான அமைப்புகளை உருவாக்கவும் உதவி வந்த கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு,
தற்போது 85,000 மக்கள் தங்கள் வாழ்வைத் துவக்க தனிப்பட்ட முறையில் நேரடியாக உதவ உள்ளதாக
அறிவித்துள்ளது. ஏழை மக்கள் புதிதாக கால்நடைகளை வாங்கவும், விவசாயிகள் விவசாயக் கடன்
பெறவும், கல்வி மற்றும் நல ஆதரவுப் பணிகள் வழங்கவும் புதியத் திட்டம் ஒன்றைத் துவக்கியுள்ளது
சர்வதேச கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு.