திருத்தந்தை 16ம் பெனடிக்டுக்கு, ஜெர்மனியின் Freising நகரசபை கௌரவக்
குடிமகன் நிலையை வழங்கியது
சன.16,2010 திருத்தந்தை 16ம் பெனடிக்டுக்கு, ஜெர்மனியின் Freising நகரசபை, அந்நகரின்
கௌரவக் குடிமகன் என்ற நிலையை இச்சனிக்கிழமை வழங்கியது. இச்சனிக்கிழமை வத்திக்கானில்
இதனை வழங்கிய அந்நகர அதிகாரிகள் மற்றும் குடிமக்களுக்கு உரையாற்றிய திருத்தந்தை, அந்நகரின்
பேராலயக் குன்று மற்றும் தனது அனுபவங்கள் பற்றிப் பகிர்ந்து கொண்டதோடு, நமக்கு திருச்சபையும்
கிறிஸ்தவர்களும் குடும்பங்களும் குருக்களும் துறவிகளும் தேவைப்படுகின்றனர் என்று கூறினார்.குருத்துவத்
திருப்பணி பற்றியும் கூறிய திருத்தந்தை, குருக்கள், கடவுளின் நண்பர்களாக இருப்பதன் மூலம்
கடவுள் மற்றவருக்கு மிக நெருக்கமாக இருப்பதற்கு உதவ முடியும் என்றார்.