ஹெயிட்டி நிலநடுக்கத்தில் பிரேசில்நாட்டைச் சார்ந்த கத்தோலிக்க மருத்துவர்
ஒருவர் பலியானார்
சன.14,2010 மேலும், ஹெயிட்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பிரேசில் நாட்டைச் சார்ந்த
கத்தோலிக்கரான குழந்தைநல மருத்துவர் ஒருவர் பலியானார். 75 வயதான Dr. Zilda Arns Neumann
பிரேசில் ஆயர் பேரவையின் சார்பில் குழந்தைகளுக்கான பணியினை 1983ஆம் ஆண்டு துவக்கி சிறப்புற
நடத்தி வருகிறார் எனவும், கரிபியன் நாடுகளில் குழந்தைகளுக்கான பணியை நடத்துவதற்கான வழிமுறைகளைச்
சொல்லித்தருவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ளச் சென்றிருந்த
Dr. Neumann கருத்தரங்கு நடைபெற்ற கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தார் எனவும்
செய்திக் குறிப்பொன்று கூறுகிறது. இச்செவ்வாயன்று மாலை ஹெயிட்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத்
தொடர்ந்து 12 நில அதிர்வுகள் அங்கு ஏற்பட்டதாகவும், இதனால், இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ளவர்களை
மீட்கும் பணி கடினமாகி வருவதாகவும் அச்செய்திக்குறிப்பு கூறுகிறது.மேலும் இந்த நிலநடுக்கத்தில்
தரைமட்டமான குருமாணவர் இல்லத்தின் இடிபாடுகளில் பல குருமாணவர்கள் சிக்கியுள்ளதாகவும்,
அவர்களை மீட்கும் பணி மும்முரமாக நடைபெருகிறதென்றும் வேறொரு செய்திக்குறிப்பு கூறுகிறது.